« »

என்ன சொல்லி விழுகிறது மழைத்துளி

0 votes, average: 0.00 out of 50 votes, average: 0.00 out of 50 votes, average: 0.00 out of 50 votes, average: 0.00 out of 50 votes, average: 0.00 out of 5
Loading...
Tamil Poetry

“இடி மின்னலுடன்
இருநிலம் வந்து,
மீண்டும் நீராவியாய்
மேலெழுந்து சென்று,
வைரத் துளிகளாய்
வையத்தில் விழுந்து,
இயற்கைக்கு இதயமாய்
இருப்பவள் நானே!

தாயாய்த் தாலாட்டிய
தென்றலுக்கு நன்றி சொல்ல,
மாரியாய் வந்து
மரங்களை வளர்க்கிறேன்!

நெல்லுக்கு இறைத்தநீர்,
புல்லுக்கும் புசிவதுபோல்;
மக்களுக்கும் மாக்களுக்கும்,
சேர்ந்தே பொழிகிறேன்!

தன்னைத் தோண்டுவாரையும்
தாங்கும் நிலம்போல்;
மரங்களை வெட்டும்
மனித குலத்தையும்,
எவ்வித குறையும்
இல்லாமல் காக்கின்றேன்!

மனித குலத்தின்,
காட்டை அழித்து
நாட்டை விரிக்கும்;
நாசப்பணி தொடருமாயின்,
இயற்கையின் இன்பக்காற்றை
முகர முடியுமோ?

என் பிறப்பிற்கே
அவலம் நேர்ந்திடுமோ?

சாதிவெறி நிறைந்த,
சராசரி மக்களே!
என்னிடம் கற்றிடுங்கள்,
நடுநிலைத் தன்மையை!

பயன்தரும் ஆறுகளிலும்,
பயனிலாக் குட்டைகளிலும்,
எவ்விதப் பாகுபாடுமின்றி,
என்றென்றும் பொழிகிறேன்!

அத்துணை உயிர்களையும்,
அன்பினால் அணைத்திட;
வெட்கமின்றி கற்றிடுங்கள்,
மாமழையாம் என்னிடம்!”

இங்ஙனம்,
அமுதூட்டும் கூக்குரலில்,
ஆருயிர்கள் அனைத்திடமும்;
சொல்லிக்கொண்டே விழுகிறது,
சொக்கவைக்கும் மழைத்துளி!

Leave a Reply