« P R O B L E M ….! | सैंटा क्लॉज़ की पोटली » |
கொடையே கொள்கை !
Tamil Poetry |
நம் அற்ப ஆயுள்,
அளித்திடும் பலருக்கு
உடற் கொடை!
உடலை விட்டு
உயிர் பிரிந்தவுடன்;
சுழலும் இப் புவியில்:
சூரியக் கதிர்களையே
கண்டிராத மாந்தர்க்கு,
காட்சிதரும் கண் கொடை!
தேகத்திற்கு ஏதேனும்
துன்பம் நேர்ந்தால்,
தாய்மைக்கு நிகராய்
துடிதுடித்துப் போகும் இதயம்;
கொடையாய் பிறரை
காத்திடச் சென்றாலும்
உயிர்தந்த உம் பெயரையே
உச்சரித்துத் துடிக்கும்!
ஒருவர் கேட்டு
ஒருமனமாய் கொடுப்பது,
கொடையல்ல, பிச்சை!
நற்பலன் வேண்டி
அளிப்பது தானம்;
பிரதிபலன் வேண்டாது
கொடுப்பது கொடை!
Very beautiful explanation given for ‘Kodai’ here. Wonderful message of ‘donation’of our body/organ/s
after our lifetime is simply explained in very nice way. Super Arthika. Keep it up.