« »

பூக்கவை…!

0 votes, average: 0.00 out of 50 votes, average: 0.00 out of 50 votes, average: 0.00 out of 50 votes, average: 0.00 out of 50 votes, average: 0.00 out of 5
Loading...
Tamil Poetry

அடைக்கலம் இன்றி
அலறும் அகதிகளிடம்;
ஆதரவைப் பூக்கவை!

உழைப்பின்றி ஊதியத்தை
எதிர்பார்ப்போர் உடலில்;
வியர்வையைப் பூக்கவை!

குடித்து தினந்தினம்
கூத்தாடுவோர் உளத்தில்;
குடிமையைப் பூக்கவை!

சாதிவெறி நிறைந்த
சராசரி மக்களிடம்;
சமரசம் பூக்கவை!

துவண்டோர் மனதில்
துணையாய் நின்று;
துள்ளலைப் பூக்கவை!

படிப்பின்றி பழுதாகும்
பூவையரிடம்;மலாலாவின்
புரட்சியைப் பூக்கவை!

உன்னை புண்படச் செய்தோரின்
பூவிதழ் தனிலும்;
புன்னகைப் பூக்கவை!

4 Comments

  1. Rajamani Srinivasan says:

    இக்கவிதையைப் படித்ததும் என் மனம் மகிழ்ச்சியில் பூத்தது. சிறு திருத்தும் ‘பூவையரிடம்; ‘பூவயரிடம்’ (சின்ன எழுத்து பிழை).

  2. Indha kavithaiyil enakku pidiththa varigal

    உன்னை புண்படச் செய்தோரின்
    பூவிதழ் தனிலும்;
    புன்னகைப் பூக்கவை!

    துவன்டூர் மனதில் – please correct it as thuvandore….

Leave a Reply